×

நீர்ச்சத்து குறைபாடு வாலிபர் சுருண்டு விழுந்து பலி

 

ஈரோடு, ஜூலை 14: ஈரோடு, மோளகவுண்டன்பாளையம், ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ஆகாஷ்குமார் (21). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு செல்போன் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஆகாஷ்குமார் நீர்சத்து குறைபாடு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தார். இது தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் ஆகாஷ்குமார் வீட்டில் திடீரென்று சுருண்டு விழுந்தார். பின்னர் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து ஈரோடு தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post நீர்ச்சத்து குறைபாடு வாலிபர் சுருண்டு விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Sivakumar ,Jeevanandam Road, Molagauntanpalayam, Erode ,Akash Kumar ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது